தவழ்ந்து வருகையிலே, பெருமிதப் புன்னகை புரிந்தாய் .
நடக்க முயற்சித்து தடுமாறிய பொழுது,

தவித்துக் கை கொடுத்தாய்!
எழுதற்குரிய புத்தகத்தை விடுத்து,
வீட்டுச் சுவரை புத்தகமாக்கிய பின்னும்
சிறு கண்டிப்புடன் கற்பித்தாய்.
உன் பயிற்சியினால் பள்ளியில் முதலிடம் பெற்றபொழுது,
பல்வேறு நபர்களிடம் பகிர்ந்து ஆனந்தமடைந்தாய்;
முடியாதென்று எதற்கும் சொல்லும் மடந்தை பருவத்தை
மனம் கவரும் சொல்லில் மாற்றினாய்!
உரிய வயதில் உரியவரிடம் கொடுத்து, உலகறியச் செய்தாய்;
அறிந்தேன் அம்மா !!
அம்மா என்பவள் தவம் புரிபவள் என்று,
அன்பே உருவான ஆருயிர் என்று,
அள்ளி அணைக்கும் த்யாகத்தின் கருவென்று !!
தவித்துக் கை கொடுத்தாய்!
ReplyDeletechanceless line.... oru paanai sortrukku oru soru padham nu solra maari... indha oru line podhum....
awesome narration...
@JS anna: thanks anna :) my mom liked it a lot too :)
ReplyDeletesooper da :) awesome lines....
ReplyDelete@Shanthee: thanks da... :)
ReplyDeletehey.. jus amazing.. very nice !! :)
ReplyDelete@Saathappan: Thanks :)
ReplyDelete